search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் விநியோகம் நிறுத்தம்"

    • சூளைமேடு நீர் பகிர்மான நிலையம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் அருகில் குடிநீர்க்குழாய் இணைப்பு பணிகள் நாளை, நாளை மறுநாள் நடைபெறவுள்ளதால் சூளைமேடு நீர் பகிர்மான நிலையம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணி வரை அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

    தேனாம்பேட்டை மண்டலத்தில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோபாலபுரம், தியாகராய நகர், தேனாம்பேட்டை கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, சின்மயா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, ரங்கராஜபுரம், தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், சி.ஐ.டி. நகர்.

    வளசரவாக்கம் மண்டலத்தில் தாய்சா அடுக்குமாடி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர்த் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.
    • சனிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் பகுதிகளில்மாநகராட்சி சார்பில் குடிநீர்விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் தலைமை நீரேற்று நிலையம் மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு புதிய மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் வாரியத்தினரால் மின் பணிகள் இரு தினங்கள் மேற்க்கொள்ளப்பட உள்ளதால் குடிநீர் இறைப்பு பணிகள் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் இரு தினங்கள் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்குட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்குட்பட்ட வார்டு 44, 45, 46, 47, 48, 49, 50, 51 & 56 மற்றும் மண்டலம் 4-க்குட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் 15.12.2022 மற்றும் 16.12.2022 (வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 17.12.2022 சனிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×